செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் அணிக்கு 146 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருச்சி

Published On 2021-07-27 22:24 IST   |   Update On 2021-07-27 22:24:00 IST
146 ரன்கள் என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடி வருகிறது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 11வது ஆட்டத்தில்  திருச்சி வாரியர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

பேட்டிங்கை தேர்வு செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதீஷ் ராஜகோபால் 45 ரன்கள் எடுத்தார். முகமத் கான் 26 ரன்களும் சுமத் ஜெயின் 22 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

இதை அடுத்து 146 ரன்கள் என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

Similar News