செய்திகள்
ஆஷ்லி பார்ட்டி

விம்பிள்டன் டென்னிஸ் - ஆஷ்லி பார்ட்டி, பிளிஸ்கோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்

Published On 2021-07-09 03:45 IST   |   Update On 2021-07-09 13:41:00 IST
நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-3, 7-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை தோற்கடித்தார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 5-7, 6-4, 6-4 என்ற செட்களில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டியும், கரோலினா பிளிஸ்கோவாவும் மோதுகின்றனர்.

Similar News