செய்திகள்
இத்தாலி வீரர் பெரெட்டினி

விம்பிள்டன் டென்னிஸ் - இத்தாலி வீரர் பெரெட்டினி அரை இறுதிக்கு தகுதி

Published On 2021-07-08 15:57 IST   |   Update On 2021-07-08 15:57:00 IST
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதியில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசும் மோதினர்.

லண்டன்:

கிராண்ட்சிலாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதியில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசும் மோதினர்.

இதில் பெரெட்டினி 6-3, 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.

இதில் பெரெட்டினி (இத்தாலி)- ஹர்காக்ஸ் (போலந்து), ஜோகோவிச் (செர்பியா) - ‌ஷபோவலோவ் (கனடா) மோதுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. ஒரு போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா) கெர்மரி (ஜெர்மனி) மோதுகிறார்கள்.

மற்றொரு அரை இறுதியில் பிளிஸ்கோவா (செக் குடியரசு)- சபலென்கா (பெலாரஸ்) பலப்பரீட்சை நடத்துகின்றார்கள்.

Similar News