செய்திகள்
ஆஷ்லி பார்ட்டி

விம்பிள்டன் டென்னிஸ் - ஆஷ்லி பார்ட்டி, கெர்பர் அரையிறுதிக்கு முன்னேறினர்

Published On 2021-07-07 02:08 IST   |   Update On 2021-07-07 02:08:00 IST
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் காலிறுதிக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-1,6-3 என்ற நேர் செட்டில் அஜ்லா டாம்ஜனவோவிச்சை (ஆஸ்திரேலியா) வெளியேற்றி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு காலிறுதியில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் கரோலினா முச்சோவாவை (செக் குடியரசு) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சுவிட்சர்லாந்தின் விக்டோரியா கொலுபிக்கை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார். 

பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் துனிசியாவின் ஒன்ஸ் ஜாபிரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி கண்டார்.

Similar News