செய்திகள்
கபில்தேவ்

பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க தேவையில்லை- கபில்தேவ் சொல்கிறார்

Published On 2021-07-05 11:57 IST   |   Update On 2021-07-05 11:57:00 IST
இங்கிலாந்து தொடருக்காக கூடுதல் வீரர்களை சேர்த்து ஏற்கனவே உள்ளவர்களை அவமதிக்க வேண்டாம். இதுபோன்ற முடிவு சரியானது அல்ல. அணி தேர்வில் கேப்டனுக்கும், நிர்வாகத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரவிசாஸ்திரி பயிற்சியாளராக உள்ளார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையோடு அவரது பதவி காலம் முடிவடைகிறது.

இதற்கிடையே இலங்கை சென்றுள்ள இந்திய அணிக்கு ராகுல்டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவிசாஸ்திரிக்கு பதிலாக டிராவிட் நியமிக்கப்பட வேண்டுமா? என்று முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

இதைபற்றி தற்போது பேச வேண்டிய தேவையில்லை. இலங்கை தொடர் முடியட்டும். அங்கு வீரர்கள் வெளிப்படுத்திய செயல் திறனை அறிந்து கொள்வோம். ஒரு புதிய பயிற்சியாளரை நியமிக்க முயற்சி செய்யலாம். அதில் எந்த தவறும் இல்லை.

தற்போது ரவிசாஸ்திரி தனது பயிற்சியாளர் பதவியில் சிறப்பாகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை.

இங்கிலாந்து தொடருக்காக கூடுதல் வீரர்களை சேர்த்து ஏற்கனவே உள்ளவர்களை அவமதிக்க வேண்டாம். இதுபோன்ற முடிவு சரியானது அல்ல. அணி தேர்வில் கேப்டனுக்கும், நிர்வாகத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும்.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

Similar News