செய்திகள்
அஸ்வின்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கண்டனம்

Published On 2021-05-26 13:23 IST   |   Update On 2021-05-26 13:23:00 IST
பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பி.எஸ்.பி.பி. பள்ளியின் பழைய மாணவராக மட்டுமல்லாமல் 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் குழப்பமான இரவுகளை கழித்தேன். தற்போது ராஜகோபாலன் பெயர் வெளியே வந்து விட்டது. இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் அவசியம்.

இவ்வாறு அஸ்வின் கூறி உள்ளார்.

Similar News