செய்திகள்
விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை இங்கிலாந்தில் போட்டுக் கொள்கிறார்கள்

Published On 2021-05-19 10:31 GMT   |   Update On 2021-05-19 10:31 GMT
18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் முதல் டோஸ் செலுத்திவிட்டனர். 2-வது டோஸ்க்கான காலஅவகாசம் இருக்கிறது. தற்போது இந்தியாவில் அனைத்து வீரர்கள் ஒன்றாக இணைந்து, தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஜூன் 2-ந்தேதி இங்கிலாந்து சென்று அந்நாட்டின் வழிகாட்டு நெறிமுறைப்படி தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் ஜூன் 18-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுகிறார்கள். ஆகஸ்ட் 4-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதில் விளையாடுகிறார்கள்.



சுமார் 3 மாத கால தொடராக இது அமையும். எனவே முதல் டோஸ் போட்டதில் இருந்து 2-வது டோஸ் போடுவதற்கான காலம் அந்த சமயத்தில்தான் வரும். இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சுகாதாரத்துறையில் 2-வது டோஸ் எடுத்துக் கொள்வார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய வீரர்கள் யாருக்காவது கொரோனா பாசிட்டிவ் இருந்தால், குறிப்பிட்ட நாளில்  இங்கிலாந்து செல்வது குறித்து ஆலோசிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News