செய்திகள்
கேப்டன் மிதாலிராஜ்

அடுத்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார், மிதாலிராஜ்

Published On 2021-04-25 00:40 IST   |   Update On 2021-04-25 00:40:00 IST
1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன மிதாலிராஜ் இன்னும் ஆர்வம் குறையாமல் அதே உத்வேகத்துடன் விளையாடி வருகிறார்
புதுடெல்லி:

இந்திய பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ். 1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர் இன்னும் ஆர்வம் குறையாமல் அதே உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.



நிகழ்ச்சி ஒன்றில் மிதாலி பேசுகையில், ‘21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கிறேன். 2022-ம் ஆண்டில் நியூசிலாந்தில் உலக கோப்பை போட்டி நடக்கிறது. இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கும். நாம் இப்போது கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அறிவேன். ஆனாலும் உடல்தகுதியை மேம்படுத்த தொடர்ந்து உழைக்கிறேன்’ என்றார். 38 வயதான மிதாலிராஜ், 7 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீராங்கனை ஆவார்.

Similar News