செய்திகள்
கேஎல் ராகுல் - ரோகித் சர்மா

வெற்றி பாதைக்கு பஞ்சாப் திரும்புமா? மும்பையுடன் இன்று மோதல்

Published On 2021-04-23 07:28 GMT   |   Update On 2021-04-23 07:28 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில் நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில் நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணி இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியை பெற்று உள்ளது. அந்த அணியில் டி காக், சூர்யகுமார் யாதவ், இ‌ஷன் கிஷான், போல்லார்ட், பும்ரா, ராகுல் சாகர், போல்ட் போன்ற வீரர்கள் உள்ளனர்.

கடந்த ஆட்டத்தில் டெல்லியிடம் மும்பை தோல்வி அடைந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற முனைப்பு காட்டும். மும்பையின் பேட்டிங்கில் இன்னும் வலுவான தன்மை வரவில்லை. ஆனால் பந்து வீச்சு சிறப்பாக இருந்து வருகிறது. பேட்டிங்கில் முன்னேற்றம் காண்பது அந்த அணிக்கு அவசியமாகும்.

பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் (ராஜஸ்தானுக்கு எதிராக) வெற்றி பெற்றது. அதன்பின் மூன்று ஆட்டத்தில் (சென்னை, டெல்லி, ஐதராபாத்) தொடர்ச்சியாக தோற்றது. இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு பஞ்சாப் திரும்புமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியில் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, ஷாருக்கான், முகமது சமி, அர்ஷ்தீப் சிங் போனற வீரர்கள் உள்ளனர். அந்த அணியின் பேட்டிங், சென்னை, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக மோசமாக இருந்தது. முறையே 106 ரன்னுக்கு 120 ரன்னும் எடுத்தது.

இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

Similar News