செய்திகள்
உலக இளையோர் குத்துச்சண்டை : 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியின் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜித்திகா, போலந்தின் நாதலியாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
புதுடெல்லி:
உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜித்திகா 5-0 என்ற கணக்கில் போலந்தின் நாதலியா குக்சிஸ்காவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
51 கிலோ எடைப்பிரிவு இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பேபிரோஜிசனா சானு 5-0 என்ற கணக்கில் ரஷியாவின் வாலெரியா லின்கோவாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதேபோல் இந்திய வீராங்கனைகள் பூனம் (57 கிலோ), வின்கா (60 கிலோ) ஆகியோரும் தங்கள் பிரிவில் தங்கத்தை அறுவடை செய்தனர்.
உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜித்திகா 5-0 என்ற கணக்கில் போலந்தின் நாதலியா குக்சிஸ்காவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.