செய்திகள்
பின் ஆலன்

3-வது டி20 போட்டியிலும் வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து

Published On 2021-04-01 10:39 GMT   |   Update On 2021-04-01 10:39 GMT
பின் ஆலன் 29 பந்தில் 71 ரன்கள் விளாச, 3-வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. மழைக்காரணமாக ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் 19 பந்தில் 44 ரன்களும், பின் ஆலகன் 29 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 71 ரன்களும் விளாசினர்.

பின்னர் 10 ஓவரில் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்காளதேசம் 9.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



டிம் சவுத்தி 3 விக்கெட்டும், டாட் ஆஸ்லே 4 விக்கெட்டும் வீழ்த்தினர். 29 பந்தில் 71 ரன்கள் விளாசிய பின்  ஆலன் ஆட்டநாயகன் விருதையும், கிளென் பிலிப்ஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
Tags:    

Similar News