செய்திகள்
ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் ஹசில்வுட் விலகல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹசில்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
சென்னை:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ஹசில்வுட் திடீரென போட்டியில் இருந்து விலகி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆஷஸ் தொடரை கருத்தில் கொண்டு விலகியதாக கூறி உள்ளார்.
வேகப்பந்து வீச்சாளரான ஹசில்வுட் விலகியது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.