செய்திகள்
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்: பவர் பிளேயில் 29/3

Published On 2021-03-12 19:41 IST   |   Update On 2021-03-12 20:15:00 IST
இந்தியா அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அகமதாபாத்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இன்று தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள்:

இ்ந்தியா: லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோர்கன் (கேப்டன்), சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட், அடில் ரஷித்.

முதல் 6 ஓவரில் இந்திய அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலி டக் அவுட் முறையில் வெளியேறினார்.

Similar News