செய்திகள்
ரோகித் சர்மா- விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

Published On 2021-02-20 15:55 GMT   |   Update On 2021-02-20 15:55 GMT
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிந்ததும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:

விராட் கோலி (கேப்டன்) ரோகித் சர்மா ( துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், இஷன் கிஷான், யுஸ்வேந்திர சகால், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர், திவேதியா, புவனேஷ் குமார், தீபக் சகார், ஷர்துல் தாகூர்,

இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டி 20 போட்டி வரும் மார்ச் 12 ஆம் தேதி தொடங்க உள்ளது.
Tags:    

Similar News