செய்திகள்
ப்ரூஸ் ஆக்சன்போர்டு

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ப்ரூஸ் ஆக்சன்போர்டு ஓய்வு பெற்றார்

Published On 2021-01-28 09:54 GMT   |   Update On 2021-01-28 09:54 GMT
ஐசிசி-யின் எலைட் பேனல் நடுவராக பணியாற்றி வந்த ஆஸ்திரேலியாவின் ப்ரூஸ் ஆக்சன்போர்டு, தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ப்ரூஸ் ஆக்சன்போர்டு. இவர் 2006-ல் இருந்து நடுவராக பணியாற்றி வந்தார். கடந்த 2012-ல் இருந்து ஐசிசி-யின் எலைட் பேனல் நடுவராக பணியாற்றி வந்தார்.

15 வருடங்களாக நடுவராக பணிபுரிந்து வந்த ஆக்சன்போர்டு, தற்போது நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

சுமார் 200 போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். 62 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பிரிஸ்பேன் டெஸ்டில் பணியாற்றினார்.

60 வயதாகும் ஆக்சன்போர்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 உலக கோப்பையில் நடுவராக பணியாற்றியுள்ளார். பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை தன்னை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கவசத்துடன் நடுவர் பணியை மேற்கொள்வார்.
Tags:    

Similar News