செய்திகள்
மார்க் டெய்லர்

முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் இந்தியா பழைய நிலைக்கு திரும்ப நல்ல வாய்ப்பு: மார்க் டெய்லர்

Published On 2020-12-25 15:45 GMT   |   Update On 2020-12-25 15:45 GMT
இந்தியா மெல்போர்ன் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் அடிலெய்டு படுதோல்வியில் இருந்து மீண்டு வர நல்ல வாய்ப்பு என மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் சுருண்டதால், மீதுமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுமா? என்பதை விட தாக்குப்பிடித்து விளையாடுமா? என்ற கேள்வியே அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் மெல்போர்ன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் இந்தியா பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்க் டெய்லர் கூறுகையில் ‘‘இந்தியா ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. அவர்கள் இன்னும் சிறந்த வீரர்களை பெற்றிருக்கிறார்கள்.விராட் கோலி இல்லாதது வெளிப்படையாகவே இந்திய அணியின் பேட்டிங்கிலும், கேப்டன் பதவியிலும் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இருந்தாலும் புஜாரா, ரஹானே ஆகியோரை இந்திய அணி பெற்றுள்ளது.

அவர்கள் போதுமான அளவிற்கு ரன்கள் குவித்து விட்டால், 10 விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள். இந்தியா சிறப்பாக விளையாடி ரன்கள் அடித்தால், அவர்களுடைய பந்து வீச்சாளர்கள் அவர்களுடைய வேலையை சிறப்பாக செய்வார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News