செய்திகள்
பாபர் அசாம்

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: முதல் போட்டியில் இருந்து பாபர் அசாம் விலகல்

Published On 2020-12-21 10:16 GMT   |   Update On 2020-12-21 10:16 GMT
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் காயம் இன்னும் சரியாகாததால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.
டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கு தயாரானபோது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் க்கு காயம் ஏற்பட்டது. இதனால் டி20 தொடரில் அவர் விளையாடவில்லை.

டி20 தொடர் முடிந்த பின்னர் முதல் டெஸ்ட் 26-ந்தேதியும், 2-வது போட்டி ஜனவரி 3-ந்தேதியும் தொடங்குகிறது. இந்த நிலையில் காயம் இன்னும் குணமடையாததால் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக்கும் இடம்பெறவில்லை.;பாபர் அசாம் இல்லாததால் முகமது ரிஸ்வான் கேப்டனாக செயல்பட உள்ளார்.
Tags:    

Similar News