செய்திகள்
நாங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்புகிறோம்: பிசிசிஐ-க்கு புதுச்சேரி சங்கம் கடிதம்
நாங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்புகிறோம் என பிசிசிஐ-க்கு புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
லோதா கமிட்டி பரிந்துரையின்படி புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ நடத்தும் முக்கியமான தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதனால் கிரிக்கெட் கட்டமைப்புகளை சிறந்த வகையில் உருவாக்கியுள்ளது. புதுச்சேரியில் மின்சார கோபுர வசதியுடன் ஆறு மைதானங்கள் உள்ளன.
இந்த நிலையில் சர்வதேச போட்டிகளை நடத்த விரும்புகிறோம். அனுமதியுங்கள் என புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் சார்பில் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கம் அழகான மைதானங்களை கட்டியுள்ளது. மின்சார விளக்கு கோபுரம் வசதி கொண்ட ஆறு மைதானங்கள் உள்ளது. கடந்த சில வருடங்களில் இருந்து நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகிறோம். வருங்காலத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் அல்லது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நாங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுகோள் விடுக்கிறோம். இது சிறிய மைதானங்கள் வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு மண்டலத்தில் உள்ள அணிகளுக்கு பயோ-செக்யூர் வழங்கி, போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறோம். ஒட்டுமொத்த சையத் முஷ்டக் அலி டி20 தொடரையும் ஆறு தரமான மைதானங்களில் நடத்தலாம். இந்த தொடருக்கான முதல்தர போட்டிகளுக்கான ஆறு மைதானங்களை தர தயாராக இருக்கிறோம்.
அனைத்து தயராக உள்ளது. இரண்டு மண்டல அணிகள் நான்கு முதல் ஐந்து மாதங்கள் தங்கும் வகையில் 4 ஸ்டார் ஓட்டல்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளது.