செய்திகள்
ஹர்திக் பாண்ட்யா, டி நடராஜன்

டி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா

Published On 2020-12-02 17:41 GMT   |   Update On 2020-12-02 17:41 GMT
மிகவும் எளிமையான பின்புலத்தில் இருந்த வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பர்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 302 ரன்களை குவித்தது.

அதற்கு பெரிய பங்களிப்பை கொடுத்தார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. 76 பந்துகளில் 92 ரன்களை குவித்தார் அவர். இந்த போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை பாண்ட்யா பெற்றார்.

ஆட்டநாயகன் விருதினை பெற்ற பின் பேசிய பாண்ட்யா, “இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அணியின் பந்து வீச்சாளர் நடராஜன் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்தவர். அவரது கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன். ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது ஆட்டத்தில் வெற்றி பெற அதிக கஷ்டப்பட வேண்டியிருக்கும்” என்றார். 
Tags:    

Similar News