செய்திகள்
சூர்யகுமார் யாதவ், ஹர்பஜன் சிங்

இவர் இந்தியாவின் டி வில்லியர்ஸ்: ஹர்பஜன் சிங்

Published On 2020-11-13 17:02 GMT   |   Update On 2020-11-13 17:02 GMT
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ், இந்தியாவின் டி வில்லியர்ஸ் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் மைதானத்தின் எல்லா பகுதிகளுக்கும் சுழற்பந்து, வேகப்பந்து வீச்ச என பாராமல் விளாசக் கூடியவர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். ஒவ்வொரு சீசனிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருந்தாலும் அவருக்கு இன்னும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் இந்தியவின் டி வில்லியர்ஸ் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 13-வது சீசனில் 16 போட்டியில் 480ரன்கள் விளாசியுள்ளார். ஸ்டிரைக் ரேட் 145.01ஆகும்.

‘‘சூர்யகுமார் யாதவ் தன்னைத்தானே சிறந்த கேம் சேஞ்சராக மாற்றிக்கொண்டு, மும்பை இந்தியன்ஸ்க்கு மேட்ச் வின்னராக திகழ்கிறார். அவருடைய பேட்டிங்கில் அதிகமாக பொறுப்பு எடுத்துக் கொள்கிறார்.

அவர் ஸ்டிரைக் ரேட் 100 வைத்துள்ளார். நீங்கள் ஸ்டிரைக் ரேட் 100 வைக்க வேண்டுமென்றால், முதல் பந்தில் இருந்து சிறப்பாக அடித்து விளையாட வேண்டும். அனைத்து வகையான ஷாட்டுகளை விளையாடும் அவரை தடுத்து நிறுத்துவது கடினம். கவருக்கு மேல் தூக்கி அடிக்கிறார்.

ஸ்வீப் ஷாட் சிறப்பாக விளையாடுகிறார். அதேபோல் சுழற்பந்து வீச்சையும், வேகப்பந்து வீச்சையும் விளாசுகிறார். அவர் இந்தியாவின் ஏபி டி வில்லியர்ஸ்’’ என்றார்.
Tags:    

Similar News