செய்திகள்
சென்னை கிரிக்கெட் மைதானம்

ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக வீரர்களின் பயிற்சி அடுத்தவாரம் தொடக்கம்

Published On 2020-11-12 10:46 GMT   |   Update On 2020-11-12 10:46 GMT
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக முதல்தர கிரிக்கெட் வீரர்கள் கடந்த 7 மாதங்களாக எந்தவித பயிற்சிலும் பங்கேற்காமல் உள்ளனர்.
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்புடன் பயிற்சியை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஆனாலும் பாதுகாப்புக்கு பயந்து பயிற்சியில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி முகாமை அடுத்த வாரம் தொடங்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு பிறகு பயிற்சி தொடங்கப்படும் என்று வீரர்கள் மற்றும் ஊழியர்களிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

வருகிற திங்கட்கிழமை வீரர்கள் மற்றும் ஊழியர் களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் 41 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அனைத்து பரிசோதனை முடிவு வந்தபிறகே பயிற்சி தொடங்கப்படும். 

பயிற்சி நடைபெறும் நேரம் இன்னும் முடிவு செய்ய்படவில்லை. பயிற்சி முகாம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News