செய்திகள்
பொல்லார்ட், ரோகித் சர்மா

ஐபிஎல் கோப்பையை வென்ற ஐந்து முறையும் மும்பை அணியில் இடம் பிடித்த இருவர்கள்

Published On 2020-11-11 17:37 GMT   |   Update On 2020-11-11 17:37 GMT
ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோர் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற ஐந்து முறையும் அந்த அணிக்காக விளையாடியவர்கள் ஆவார்கள்.
ஐபிஎல் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ். கடந்த வருடமும் கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் அடுத்தடுத்து கோப்பையை வென்ற 2-வது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து கோப்பையை வென்றிருந்தது.

மேலும் அந்த அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதேபோல் ஐந்து முறையும் அணியில் இருந்த வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றுள்ளார்.

ரோகித் சர்மா 6 முறை கோப்பையை வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
Tags:    

Similar News