செய்திகள்
ஐபிஎல் முடிந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டனர் இந்திய அணி வீரர்கள்
ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த நாளா இன்றே இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டனர்.
ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நேற்று வரை (நவம்பர் 10) நடைபெற்றது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்து ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த வீரர்களும், இடம் பெறாமல் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தவர்களும் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.
ஐபிஎல் தொடர் முடிந்த மறுநாளே ஓய்வின்றி அப்படியே சென்றுள்ளனர்.