செய்திகள்
ரபேல் நடால், நோவக் ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் - இறுதிப் போட்டியில் நடால்-ஜோகோவிச் பலப்பரீட்சை

Published On 2020-10-10 23:56 GMT   |   Update On 2020-10-10 23:56 GMT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரபேல் நடால் - நோவக் ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் மகுடத்துக்கான ஆட்டத்தில் 12 முறை சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ‘களிமண் தரை கதாநாயகன்’ ரபேல் நடாலுடன் (ஸ்பெயின்), ஜோகோவிச் மோதுகிறார்.

இந்த போட்டியில் நடால் வாகை சூடினால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதுடன், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் பெரடரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்வார். ஜோகோவிச் வென்றால் அவருக்கு இது 18-வது கிராண்ட்ஸ்லாமாக அமையும்.

இருவரும் இதுவரை 55 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றனர். இதில் ஜோகோவிச் 29 முறையும், நடால் 26 தடவையும் வென்றுள்ளனர். பிரெஞ்ச் ஓபனில் 7 முறை மோதி உள்ளனர். இதில் நடால் 6-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 2 நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
Tags:    

Similar News