செய்திகள்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள்

டு பிளிஸ்சிஸ், வாட்சன் அவுட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஓவரில் 35/2

Published On 2020-10-10 22:08 IST   |   Update On 2020-10-10 22:08:00 IST
170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் பிளேயில் வாட்சன், டு பிளிஸ்சிஸை இழந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் அடித்தது.

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. 3-வது ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடிக்க 7 ரன்கள் கிடைத்தது.

4-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரை டார்கெட் செய்ய நினைத்தார் டு பிளிஸ்சிஸ் 4-வது மற்றும் 5-வது பந்தை தூக்கி அடிக்க நினைத்தார். பந்து மேல் நோக்கி சென்றாலும் கேட்ச் ஆகவில்லை. ஆனால் கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். சென்னை 19 ரன்னுக்குள் முக்கிய விக்கெட்டை இழந்தது.

அடுத்து அம்பதி ராயுடு களம் இறங்கினார். 5-வது ஓவரை நவ்தீப் சைனி வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியால் 2 ரன்கள் மட்டுமே அடித்தது.

6-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வாட்சன் அடுத்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். வாட்சன் 18 பந்தில் 14 ரன்கள் அடித்தார். 25 ரன்னுக்குள் சென்னை முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார்.

8 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு சிஎஸ்கே 35 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News