செய்திகள்
மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய இன்னும் ஆர்வமாக இருக்கிறோம்: மான்செஸ்டர் சிட்டி
பார்சிலோனா அணியில் இருந்த விலகப்போவதாக மெஸ்சி அறிவித்ததும், அவரை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்ட் சிட்டி தயாராக இருந்தது.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ஆரம்ப காலத்தில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் லீக், லா லிகா கோப்பையில் தோல்வியை சந்தித்ததால் பார்சிலோனாவுக்கும், மெஸ்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளுமாறு மெஸ்சி அணியிடம் கேட்டுக்கொண்டார். அப்படி முறித்துக்கொண்டால் ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் சென்று விடலாம் என எண்ணினார். அப்போது மான்செஸ்டர் சிட்டி அவரை ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்தது.
ஆனால் பார்சிலோனாவை விட்டுச் சென்றால் அதற்கு உண்டான தொகையை பார்சிலோனாவிற்கு செலுத்த வேண்டும் என லாலிகா தெரிவித்தது. இதனால் 2020-2021 சீசனில் அணிக்காக விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் 2020-2021 சீசன் முடிந்த பின்னரும் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என மான்செஸ்டர் சிட்டி தெரிவித்துள்ளது.