செய்திகள்
ரபேல் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நடால்

Published On 2020-10-09 18:27 GMT   |   Update On 2020-10-09 18:27 GMT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் டியாகோ ஸ்வாட்ர்ஸ்மேனை வீழ்த்தி ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோர் மோதினார்கள்.

இதில் ரபேல் நடால் 6-3, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
Tags:    

Similar News