செய்திகள்
டோனி-சர்மா

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

Published On 2020-09-19 13:50 GMT   |   Update On 2020-09-19 13:50 GMT
ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
துபாய்:

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர் கொள்கிறது.

இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. அதற்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. 

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இரு அணி வீரர்கள்:

சென்னை: முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (கேப்டன்), ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், பியுஸ் சாவ்லா, லுங்கி ங்கிடி

மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட்,
ராகுல் சாஹர், பேட்டின்சன், டிரண்ட் போல்ட், பும்ரா. 
Tags:    

Similar News