செய்திகள்
டி வில்லியர்ஸ்

ஆர்சிபி-க்காக இந்த பணியையும் செய்ய இருக்கிறார் டி வில்லியர்ஸ்

Published On 2020-08-27 11:33 GMT   |   Update On 2020-08-27 11:33 GMT
தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பராக பணியாற்ற வாய்ப்புள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். அவர் தென்ஆப்பிரிக்கா அணியில் அறிமுகம் ஆனபோது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டார். அதன்பின் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி விக்கெட் கீப்பர் பணியை தவிர்த்தார்.

ஐபிஎல் தொடரில் டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த முறை சாதித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது.

இதனால் தொடக்கத்தில் இருந்தே பேலன்ஸ் அணியை களம் இறக்க விரும்புகிறது. இதனால் டி வில்லியர்ஸை விக்கெட் கீப்பராக பணியாற்ற வைக்க அந்த அணி ஆர்வம் காட்டி வருகிறது.

இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் கூறுகையில் ‘‘தரமான அணியை உருவாக்க ஏராளமான ஆலோசனைகள் நடத்தியுள்ளோம். டி வில்லியர்ஸ் ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா அணிக்காக விக்கெட் கீப்பராக செயல்பட்டவர். ஆகவே, இதுகுறித்து விவாதிக்கப்படும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இருந்தாலும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப சரியான பேலன்ஸ் கொண்ட அணியை கொண்டு விளையாடுவோம். எங்கள் அணியின் மிகப்பெரிய பகுதியாக அவர் உள்ளார். பல ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை கொடுத்துள்ளார்’’ என்றார்.

ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளார்.
Tags:    

Similar News