செய்திகள்
திஷந்த் யாக்னிக்

ஐ.பி.எல். 2020: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா

Published On 2020-08-12 07:34 GMT   |   Update On 2020-08-12 07:34 GMT
ஐ.பி.எல். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 2020 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக அணிகள் வருகிற 21-ந்தேதி துபாய் புறப்பட இருக்கிறது, புறப்படுவதற்கு முன் அணியைச் சேர்ந்த அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா இல்லை என்பது உறுதியானப் பிறகுதான் துபாய் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷந்த் யாக்னிக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதை அவர் தனது டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ‘‘கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும், பிசிசிஐ-யின் வழிகாட்டு நெறிமுறைப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியுடன் இணைய எனக்கு இன்னும் இரண்டு நெகட்டிவ் முடிவு தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News