செய்திகள்
பிரிஜேஷ் பட்டேல், சவுரவ் கங்குலி

ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசின் முறையான அனுமதி கிடைத்துவிட்டது: பிரிஜேஷ் பட்டேல்

Published On 2020-08-10 12:56 GMT   |   Update On 2020-08-10 12:56 GMT
ஐபிஎல் போட்டியை ஷார்ஜா, அபு தாபி மற்றும் துபாயில் நடத்த மத்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் 13-வது சீசனை இந்திய மண்ணில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா, அபு தாபி, துபாய் ஆகிய நகரங்களில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் வழங்கியது. பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்துவதற்கான கடிதத்தை அனுப்பியதால் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான வேலையில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு இறங்கியுள்ளது.

இதற்கிடையே போட்டியை வெளிநாட்டு மண்ணில் நடத்த மத்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில் தற்போது முறையான அனுமதி கிடைத்துள்ளது. இந்த தகவலை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில் ‘‘மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றிடம் இருந்து முறையான எழுத்துப்பூர்வ அனுமதியை பிசிசிஐ பெற்றுள்ளது’’ என்றார்.

மேலும், ‘‘முன்னதாக வாய்மொழியாக மத்திய அரசு சரி என்று சொன்னது. இதனால் நாங்கள் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டிடம் அறிவித்தார். தற்போது நாங்கள் பேப்பரில் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளோம். ஆகவே, ஐபிஎல் அணிகள் எல்லாவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் ஆகஸ்ட் 21-ந்தேதி 24 மணி நேரத்திற்குள் இரண்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு துபாய் புறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 22-ந்தேதி புறப்படுகிறது.
Tags:    

Similar News