செய்திகள்
முடாசர் நாசர், பாபர் அசாம்

இங்கிலாந்து தொடர் பாபர் அசாமுக்கு இறுதி பரீட்சை: முடாசர் நாசர் சொல்கிறார்

Published On 2020-07-16 15:59 GMT   |   Update On 2020-07-16 15:59 GMT
சிறந்த பேட்ஸ்மேன் என்பதை பாபர் அசாம் நிரூபிக்க இங்கிலாந்து டெஸ்ட் இறுதி பரீட்சை என்று முன்னாள் வீரர் முடாசர் நாசர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம். அவரது கிரிக்கெட் திறமையை பார்க்கும்போது பல்வேறு சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட சென்றுள்ளார். இந்த டெஸ்ட் தொடர் பாபர் அசாம் அவரை சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிப்பதற்கான கடைசி பரீட்சை என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்-ரவுண்டர் முடாசர் நாசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முடாசர் நாசர் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடர் பாபர் அசாமுக்கான இறுதி பரீட்சை. இதற்கு முன் ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். பாபர் அசாம் இதுவரை சரியான முறையில் பரிசோதிக்கவில்லை. இந்த முறை ரன்கள் குவித்தால், தற்போது பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வகையில், இங்கிலாந்திலும் ஆதிக்கம் செலுத்தினார் யாரும் அவரது திறமை குறித்து கேட்க முடியாது.

ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வீசும் பந்தை டிரைவ் ஆடுவது பாபர் அசாமின் பலவீனமாக இருந்தது. பாகிஸ்தான் ஆடுகளத்தில் விளையாடி வளர்ந்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு இது வழக்கமான பலவீனம்தான். ஆனால், தற்போது அந்த பந்தை கொஞ்சம் காலதாமதமாக பேட்டில் பந்து வலுவாக படும் அளவிற்கு மாற்றிக் கொண்டார். தென்ஆப்பிரிக்காவிவல் டேல் ஸ்டெயின் அவுட் ஸ்விங் பந்தை சிறப்பாக எதிர்கொண்டார். இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News