செய்திகள்
புஜாரா

பயிற்சியை தொடங்கிய புஜாரா, இஷாந்த் சர்மா

Published On 2020-06-24 09:55 GMT   |   Update On 2020-06-24 09:55 GMT
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் புஜாரா, இஷாந்த் சர்மா பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் இப்போது பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டுள்ளது. மிக முக்கியமாக ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீர்ரகள் பலரும் இந்த பொது முடக்க காலக்கட்டத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வீட்டில் இருந்தபடியே உரையாற்றி வருகின்றனர். பல கிரிக்கெட் வீரர்கள் இன்னும் வலைப்பயிற்சியை கூட தொடங்கவில்லை.

கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்கு வந்து பயிற்சியை மேற்கொள்வதற்கான உத்தரவை பிசிசிஐ இன்னும் பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, இன்ஸ்டாகிராமில் தான் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவில்‘‘நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள தனிமனித இடைவெளியுடன் கூடிய பயிற்சி அவசியமாகிறது’’ என தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதேபோல் டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாராவும் பயிற்சியை தொடங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பயிற்சி தயாராகும் படத்தை வெளியிட்டு ‘‘நீண்ட நாட்களுக்குப் பிறகு பயிற்சிக்கு செல்வதாக உணர்கிறேன். ஆனால், இங்கு வந்த பிறகு அது நேற்றுபோல் உணர்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News