செய்திகள்
ஜோகோவிச்

நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று: அவரது மனைவிக்கும் பாசிட்டிவ்

Published On 2020-06-23 13:25 GMT   |   Update On 2020-06-23 13:25 GMT
ஏற்கனவே மூன்று வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் முடங்கியுள்ளன. இதனால் பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக காட்சி டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் நடத்தினார்.

இதில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இந்தத் தொடரில் கலந்து கொண்ட பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னுடன் நெருங்கி பழகியவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து போர்னா கோரிக், விக்டர் டிரோய்க்கி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த மூன்று பேரும் அந்தத் தொடரில் பங்கேற்றவர்கள்தான்.

மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இதற்கான பொறுப்பை ஜோகோவிச்தான் ஏற்க வேண்டும் என்ற விமர்சனம் எழும்பியது.



இந்நிலையில் ஜோகோவிச் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. இதனால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறார்.

‘‘நாங்கள் செர்பியா தலைநகர் பெல்கிரேடு வந்தபோது, டெஸ்டுக்கு உட்படுத்தப்பட்டோம். எனக்கும், எனது மனைவிக்கும் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் எங்களுடைய குழந்தைகளுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News