செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு 2 முறை கொரோனா சோதனை

Published On 2020-06-20 06:37 GMT   |   Update On 2020-06-20 06:37 GMT
இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக பாக். வீரர்கள் உள்பட அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
லாகூர்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகிற 28-ந்தேதி லாகூரில் இருந்து தனிவிமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறார்கள். அணியில் மொத்தம் 29 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர், பயிற்சி உதவியாளர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 22-ந்தேதி அன்று வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று சோதனை நடத்தப்படும். அதன் பிறகு வீரர்கள் அனைவரும் 24-ந்தேதி லாகூரில் ஒன்றிணைவார்கள். அங்கு 2-வது முறையாக சோதனை நடத்தப்படும். பிறகு நட்சத்திர ஓட்டலில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுடன் வீரர்கள் சில நாட்கள் தனித்தனியே தங்கியிருப்பார்கள். சோதனை முடிவில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Tags:    

Similar News