செய்திகள்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டியதில்லை: மஞ்ச்ரேக்கர்

Published On 2020-06-19 10:40 GMT   |   Update On 2020-06-19 10:40 GMT
விராட் கோலி சிறப்பாக விளையாடி வரும் நிலையில், கேப்டன் பதவியை மற்றொரு நபருக்கு பிரித்து கொடுக்க வேண்டியதில்லை என்று மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் விராட் கோலிக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதனால் டி20 வடிவிலான அணிக்கு மற்றொரு வீரரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற கருத்து நீண்ட காலமாக உலா வருகிறது.

இந்நிலையில் கேப்டன் பதவிவை பிரித்து கொடுக்க வேண்டியதில்லை என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்ச்ரேக்கர் கூறுகையில் ‘‘நீங்கள் மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரரரையும், தற்போது சிறப்பான கேப்டனாக இருப்பவரையும் கேப்டனாக பெறுவது அதிர்ஷ்டம் என்றால் தற்போதுள்ள நிலைக்கு நீங்கள் கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டாம்.

தற்போதைய நிலையில் மூன்று வடிவிலும் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலியை கேப்டனாக பெற்றுள்ளீர்கள். அதனால் கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டாம். எதிர்காலத்தில் அதற்கான நேரம் வரும். அப்போது பிரித்து கொடுப்பதை எண்ணலாம்  ’’என்றார்.
Tags:    

Similar News