செய்திகள்
விராட் கோலி, மலிங்கா

ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று கிரிக்கெட் விளையாட பிசிசிஐ சம்மதம்

Published On 2020-06-10 10:11 GMT   |   Update On 2020-06-10 10:11 GMT
ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட்டில் போட்டிகளில் விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கொரோனாவுக்குப் பிறகு இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அடுத்த மாதம் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் இலங்கை அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லையாம். அனுமதி பெற்றவுடன் அதற்கான வேலைகளை இலங்கை கிரிக்கெட் போர்டு செய்யும். மேலும், குறிப்பிட்ட ரசிகர்களை மைதானத்திற்கு அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை டி20 தொடரையும் நடத்த இலங்கை தயாராகி வருகிறது.
Tags:    

Similar News