செய்திகள்
கேன் வில்லியம்சன், எம்எஸ் டோனி

டோனி தனிச்சிறப்பான வீரர்: நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் புகழாரம்

Published On 2020-06-10 09:55 GMT   |   Update On 2020-06-10 09:55 GMT
டோனி கவனத்தை சிதறடிக்கும் எந்த வி‌ஷயத்திலும் சிக்கி கொள்ளமாட்டார். எது முக்கியமோ அதனை மட்டுமே நினைத்து கொண்டிருப்பார் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

டோனி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் ஸ்டார் ஸ்போட்ஸ் நிகழ்ச்சியில் கூறியதாவது:-

டோனி கவனத்தை சிதறடிக்கும் எந்த வி‌ஷயத்திலும் சிக்கி கொள்ளமாட்டார். எது முக்கியமோ அதனை மட்டுமே நினைத்து கொண்டிருப்பார். எது மிக முக்கியமோ அதில் தீவிர கவனம் செலுத்துவார். அவர் தனிச்சிறப்பானவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் டோனி குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

2003-2004-ம் ஆண்டுகளில் நான் முதல் முதலாக டோனியுடன் வெளிநாடு கிரிக்கெட் தொடருக்கு சென்றேன். அவர் அமைதியானவர் பழகுவதற்கு எளிமையானவர். அவர் கோபத்தை வெளிப்படுத்தி நான் அதிகம் பார்த்ததே இல்லை. அப்போது பார்த்ததற்கும் இப்போது நான் பார்ப்பதற்கும் டோனியிடம் வெள்ளை முடி தெரிவது மட்டுமே வித்தியாசம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News