செய்திகள்
சச்சின் தெண்டுல்கர்

ஊரடங்கு எதிரொலி - மகனுக்கு முடிதிருத்தும் கிரிக்கெட் ஜாம்பவான்

Published On 2020-05-21 07:27 GMT   |   Update On 2020-05-21 07:27 GMT
ஊரடங்கு காரணமாக சச்சின் தெண்டுல்கர் தனது மகனுக்கு முடி திருத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. பல்வேறு விளையாட்டுகள் மாற்று தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டும், சில விளையாட்டு ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

பொது ஊரடங்கு காரணமாக  விளையாட்டு பிரபலங்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் விளையாட்டு பிரபலங்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இணையதளங்களின் மூலம் பல்வேறு விளையாட்டு சார்ந்த சவால்களில் ஈடுபட்டு தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக நகர் புறங்களில் இயங்கி வரும் முடி திருத்தும் மற்றும் அழகு சாதன கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படாததால் நகரவாசிகள் தவித்து வருகின்றனர்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கிறார். இந்தநிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தன் மகனும் குட்டி சச்சினுமான அர்ஜூனுக்கு முடி திருத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது. 
Tags:    

Similar News