செய்திகள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான முகாமாக மாறியது டெல்லி கிரிக்கெட் மைதானம்

Published On 2020-05-20 16:33 IST   |   Update On 2020-05-20 16:33:00 IST
டெல்லியில் புகழ்பெற்ற பெரோஸ் ஷா கோட்லா மைதானம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான முகாமாக மாற்றப்பட்டுள்ளது.
பொது முடக்கம் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் தவித்தனர். மே1-ந்தேதியில் இருந்து அவர்கள் சொந்த மாநிலம் திரும்பி வருகின்றனர்.

உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். இவர்களுக்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, அங்கு தங்க வைத்து, கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதற்காக புகழ்பெற்ற பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை டெல்லி அரசு பயன்படுத்துகிறது. கடந்த மூன்று நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று சுமார் 2500 தொழிலாளர்கள் இங்கிருந்து வெளியேறியுள்ளனர். அதன்பின் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

‘‘வரும் நாட்களில் அதிகமானோர் வருவார்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை பேருந்து மூலம் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கான உதவிகளை செய்து வருகிறோம்’’ என்று டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் செயலாளர் ராஜன் மன்சண்டா தெரிவித்துள்ளார்.

Similar News