செய்திகள்
இளவேனில் வாலறிவன்

அர்ஜுனா விருதுக்கு தமிழக வீராங்கனை இளவேனில் பெயர் பரிந்துரை

Published On 2020-05-15 10:57 IST   |   Update On 2020-05-15 10:57:00 IST
தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டின் சங்கத்திடமும் தகுதியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அனுப்பி வைக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வகையில் தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

அர்ஜுனா விருதுக்காக துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரை பட்டியலில்,  உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் மற்றும் மனு பாக்கர், அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் இரண்டு முறை ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News