செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் - அமைப்பு குழு தலைவர் தகவல்
அடுத்த ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும் என்று அந்த போட்டியின் அமைப்பு குழு தலைவர் தெரிவித்தார்.
டோக்கியோ:
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் காரணமாக உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதுடன், பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறும் என்று கடந்த மாதம் (மார்ச்) அறிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து எதுவும் கண்டுப்பிடிக்கப்படாததால், வேகமாக பரவும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்த இக்கட்டான நிலை மாறி, சகஜ நிலை திரும்புவது எப்போது? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இதனால் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் யோஷிரோ மோரியிடம் கேட்ட போது, ‘கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அடுத்த ஆண்டும் தொடர்ந்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை 2022-ம் ஆண்டு வரை தாமதப்படுத்த முடியுமா? என்று கேட்கிறீர்கள். போட்டியை மேலும் தாமதப்படுத்த வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டுக்குள் கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும். முன்பு போர் காலத்தில் மட்டுமே போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் தற்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் (கொரோனா) மோதுகிறோம். கொரோனா வைரசை வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டால், அடுத்த கோடையில் நாங்கள் ஒலிம்பிக் போட்டியை அமைதியாக நடத்துவோம். தற்போது மக்கள் போட்டி குறித்து பந்தயம் கட்டுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.
‘ஒலிம்பிக் போட்டியை இதற்கு மேலும் தாமதப்படுவது என்பது முடியாத காரியம்’ என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் மருத்துவ சங்க தலைவர் யோஷிதகே யோகோகுரா கருத்து தெரிவிக்கையில், ‘ஒலிம்பிக் போட்டி நடத்தப்படக்கூடாது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவது மிகவும் கடினமானதாக இருக்கும்’ என்றார்.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் காரணமாக உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதுடன், பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறும் என்று கடந்த மாதம் (மார்ச்) அறிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து எதுவும் கண்டுப்பிடிக்கப்படாததால், வேகமாக பரவும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்த இக்கட்டான நிலை மாறி, சகஜ நிலை திரும்புவது எப்போது? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இதனால் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் யோஷிரோ மோரியிடம் கேட்ட போது, ‘கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அடுத்த ஆண்டும் தொடர்ந்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை 2022-ம் ஆண்டு வரை தாமதப்படுத்த முடியுமா? என்று கேட்கிறீர்கள். போட்டியை மேலும் தாமதப்படுத்த வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டுக்குள் கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படும். முன்பு போர் காலத்தில் மட்டுமே போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் தற்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் (கொரோனா) மோதுகிறோம். கொரோனா வைரசை வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டால், அடுத்த கோடையில் நாங்கள் ஒலிம்பிக் போட்டியை அமைதியாக நடத்துவோம். தற்போது மக்கள் போட்டி குறித்து பந்தயம் கட்டுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.
‘ஒலிம்பிக் போட்டியை இதற்கு மேலும் தாமதப்படுவது என்பது முடியாத காரியம்’ என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் மருத்துவ சங்க தலைவர் யோஷிதகே யோகோகுரா கருத்து தெரிவிக்கையில், ‘ஒலிம்பிக் போட்டி நடத்தப்படக்கூடாது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவது மிகவும் கடினமானதாக இருக்கும்’ என்றார்.