செய்திகள்
லீக் -1 கால்பந்து தொடர்

பிரதமர் அறிவிப்பு எதிரொலி: பிரான்ஸில் லீக்-1 கால்பந்து தொடர் ரத்து

Published On 2020-04-28 15:20 GMT   |   Update On 2020-04-28 15:20 GMT
செப்டம்பர் மாதம் வரை பிரான்ஸில் எந்தவொரு விளையாட்டும் நடைபெறாது என பிரதமர் அறிவித்துள்ளதால் லீக்-1 கால்பந்து தொடர் முடிவுக்கு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து  842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர். 45 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர்.

என்றாலும் சகஜ நிலைக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகும் என கணிக்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் 1-ந்தேதி வரை பிரான்ஸ் நாட்டில் விளையாட்டு உள்பட எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

இதனால் பிரான்ஸின் முதன்மை கால்பந்து தொடரான லீக்-1 முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே பெல்ஜியம் முதன்முதலாக கால்பந்து லீக் ரத்து செய்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பிரான்ஸ் ரத்து செய்துள்ளது.



மே மாதத்தில் பயிற்சியை தொடங்கி ஜூன் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தி விடலாம் என தொழில்முறை கால்பந்து லீக் மற்றும் பிரான்ஸ் கால்பந்து பெடரேசன் நினைத்தது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு லீக்-1 புள்ளிகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி தகுதி பெறும். தற்போது ரத்து செய்யப்பட்டதால் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
Tags:    

Similar News