செய்திகள்
டேவிட் வார்னர்

ஐதராபாத் அணிதான் சிறந்த டெத் பவுலிங்கை கொண்டுள்ளது: வார்னர் பெருமிதம்

Published On 2020-04-24 17:26 IST   |   Update On 2020-04-24 17:26:00 IST
புவனேஷ்வர் குமார், ரஷித் கானுடன் சிறந்த பந்து வீச்சு குழுவை கொண்டுள்ள நாங்கள்தான் சிறந்த டெத் பவுலிங் அணி என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது. 2016 சீசனை டேவிட் வார்னர் தலைமையிலான  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வென்றது. அந்த அணியில் புவனேஷ்வர் குமார், ரஷித் கான் போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

புவனேஷ்வர் குமார் இரண்டு முறை அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக பர்பிள் தொப்பியை வென்றுள்ளார். தொடர்ந்து பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்நிலையில் எங்கள் அணிதான் டெத் பவுலிங்கில் சிறந்தது என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘நாங்கள் சிறந்த அணியை பெற்றுள்ளோம். எங்களது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். பந்து ஸ்விங் செய்து தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களையும், அநேகமாக தலைசிறந்த டெத் பவுலிங்கையும் கொண்ட அணியாக திகழ்கிறோம்’’ என்றார்.

கடந்த சீசனில் 12 போட்டிகளில் டேவிட் வார்னர் 692 ரன்கள் குவித்தார். பேர்ஸ்டோவ் 10 போட்டிகளில் 445 ரன்கள் விளாசினார். இரண்டு பேரும் உலக கோப்பை தொடருக்கான முகாமுக்கு சென்றதால் இறுதிக்கட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

Similar News