செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

நெதர்லாந்து சுற்றுப் பயணத்தை காலவரையின்றி ஒத்திவைத்தது பாகிஸ்தான் கிரிக்கெட்

Published On 2020-04-23 15:50 GMT   |   Update On 2020-04-23 15:50 GMT
நெதர்லாந்து அரசு செப்டம்பர் 1-ந்தேதி வரை அனைத்து வகையான நிகழ்ச்சிகளையும் தடை செய்துள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ஒத்திவைத்துள்ளது.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. ஜூலை 4, 7 மற்றும் 9-ந்தேதிகளில் இந்த போட்டிகள் நடைபெற இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெதர்லாந்து செப்டம்பர் 1-ந்தேதி வரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதித்துள்ளது.

இதனால் ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் ஒத்தி வைத்துள்ளது. ‘‘நெதர்லாந்துக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்பதை சொல்ல கவலையாக இருக்கிறது. தற்போதைய நிலையில் கிரிக்கெட்டை விட மனித உயிர்தான் முக்கியம்’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நெதர்லாந்தில் நடைபெற இருந்த பார்முலா ஒன் கார் பந்தயமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News