செய்திகள்
கிரிக்கெட் போர்டுகள்

போட்டிகள் இல்லாமல் கிரிக்கெட் போர்டுகள் தாக்குப்பிடிப்பது கடினம்: ரமீஸ் ராஜா சொல்கிறார்

Published On 2020-04-23 13:37 GMT   |   Update On 2020-04-23 13:37 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ரசிகர்கள் அல்லாமல் போட்டிகளை நடத்த முன்வர வேண்டும் என முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை போட்டிகள் ரத்து செய்யப்பட்டள்ளன. நாட்டின் எல்லையை மூடியுள்ளதால் ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் வரை போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை.

மற்ற நாடுகள் கொரோனா வைரசின் தாக்கம் சகஜ நிலையை எட்டும் காலத்தை எதிர்நோக்கி இருக்கின்றன. மருத்துவ வல்லூனர்கள், உலக சுகாதார மையம் இந்த தொற்று முற்றிலும் ஒழிய நீண்ட நாட்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே சோயிப் அக்தர் மற்றும் சில வீரர்கள் குறைந்தது ஒருவருடம் ஆகும் என்கிறார்கள். இந்நிலையில் இப்படியே சென்றால் அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரமீஸ் ராஜா கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மனித வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் கிரிக்கெட ரசிகர்கள் தற்போது பசியால் கஷ்டப்படுகின்றனர். இதுபோன்று நீண்ட நாட்கள் நீடித்தால் கிரிக்கெட் போர்டுகள் தாக்குப்பிடிக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை.

கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இல்லாமல் அவர்களால் தொடர்ந்து சம்பளத்தை பிடித்தம் செய்ய முடியாது. அப்படி செய்தால் பேரிழப்பை ஏற்படுத்தும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்ற கிரிக்கெட் போர்டுகளிடம் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் எப்படி நடத்தலாம், குறைந்தபட்சம் ரசிகர்கள் அல்லாமல் போட்டியை நடத்த முடியுமா? என்பது குறித்து பேச வேண்டும். இந்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முதல் அடியை எடுத்து வைக்க முடியும்.



எந்த கிரிக்கெட் போர்டாக இருந்தாலும் அவர்கள் பணம் செழிப்பாக வைத்திருகிறார்கள், லாக் டவுன் நேரத்தில் சம்பளத்தை கொடுக்க முடியாது எனபது பெரிய விஷயம் அல்ல. மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவது குறித்து பேசுவது நமக்கு அவசியமானது. ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் என்றாலும், ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

வங்காளதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுகள் பாதிப்பை சந்திக்கக் கூடிய சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News