செய்திகள்
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட்

இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டு மைதானத்தைதான் தேர்வு செய்வேன்: ஹசில்வுட்

Published On 2020-04-22 11:01 GMT   |   Update On 2020-04-22 11:01 GMT
இந்தியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அடிலெய்டு மைதானத்தை தேர்வு செய்வேன் என ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இனிமேல் எப்போது கிரிக்கெட் போட்டி தொடங்கும் என்று யாராலும் சொல்ல முடியாத நிலைதான் தற்போது உள்ளது.

கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் கிரிக்கெட் போர்டுகள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. சுமார் ஆறு மாதம் நடைபெறாவிடில் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்.

இதனால் போட்டிகள் மீண்டும் தொடங்கிய பின்னர் தள்ளிவைக்கப்பட்ட போட்டிகள் அனைத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளன. ஒருவேளை அக்டோபர் மாதத்திற்கு பிறகும் கொரோனா வைரஸ் பிரச்சனை முடியவில்லை என்றால் பூட்டிய மைதானத்திற்குள், அல்லது ஒரே மைதானத்தில் போட்டியை நடத்த திட்டமிடலாம்.

இந்திய அணி டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியை நான்கு மைதானங்களில் நடத்த சாத்தியமில்லை. ஒரே மைதானத்தில் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அடிலெய்டு மைதானத்தை தேர்வு செய்வேன் என்று ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘அடிலெய்டு மைதானம் என்றால் பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அடிலெய்டு மைதானம் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக சிறந்த ஆடுகளமாக விளங்கி வருகிறது.

இது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிற்கும் ஒத்துழைக்கும். இப்படி ஒரு எண்ணம் எனது மனதில் இல்லை. இது ஒரு ஐடியா கூட கிடையாது. ஆஸ்திரேலியாவில் உள்ள எல்லா கிரிக்கடெ் ஆடுகளத்தில் எங்களது திறமைகளை வெளிப்படுத்த விரும்புகிறோம்’’ என்றார்.

இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
Tags:    

Similar News