செய்திகள்
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தலைவர் ஸ்மித்

கோல்பாக் வீரர்களை சந்தோசமாக வரவேற்போம்: தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தலைவர் ஸ்மித்

Published On 2020-04-22 10:00 GMT   |   Update On 2020-04-22 10:00 GMT
கோல்பாக் ஒப்பந்தம் மூலம் இங்கிலாந்து சென்று கிரிக்கெட் விளையாடி வரும் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பலாம் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் திணறி வருகிறது. அம்லா, பிலாண்டர், டி வில்லியர்ஸ், மோர்கல் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றதால் மீண்டும் தலைசிறந்த அணியை கட்டமைக்க திணறி வருகிறது.

இதற்கிடையில் சிறப்பாக விளையாடிய சில வீரர்கள் கோல்பாக் என்ற ஒப்பந்தத்தின்படி இங்கிலாந்தில் உள்ள கவுன்ட்டி அணிக்கு விளையாட சென்று விட்டார்கள். இது தென்ஆப்பிரிக்கா அணிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கோல்பாக் ஒப்பந்தத்தின்படி ஒரு வீரர் இங்கிலாந்து சென்று விளையாடினால் அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா தேசிய அணிக்காக விளையாட முடியாது.

இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்ல இருக்கிறது. அப்போது ஒரு நாட்டைச் சேர்ந்த நபர் மற்றொரு நாட்டிற்கு சென்று வேலை செய்தால், அதன்பின் சொந்த நாட்டிலும் வேலை செய்யலாம் என்ற நிலை உருவாகும். இது கோல்பாக் ஒப்பந்தத்திற்கும் பொருந்தும்.

இதனால் கோல்பாக் மூலம் இங்கிலாந்து சென்ற வீரர்கள் அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடலாம் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

‘‘கோல்பாக் ஒப்பந்த வீரர்கள் சொந்த நாடு திரும்பியதுடன் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அதன்பிறகு தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்’’ என்று ஸ்மித் தெரிவித்தார்.
Tags:    

Similar News