செய்திகள்
வித்தியாசமான முறையில் நிதி திரட்டும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வித்தியாசமான முறையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகள் நிதி திரட்டி வருகின்றனர்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் பலர் பரிதவிக்கிறார்கள். இத்தகைய ஏழைக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக நிதி திரட்ட இந்திய பெண்கள் ஆக்கி அணியினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 18 நாட்கள் உடல் தகுதி பயிற்சி குறித்த வெவ்வேறு விதமான சவால்களை இந்திய ஆக்கி அணி வீராங்கனைகள் ஆன்லைன் மூலம் அறிவித்து அதனை செய்து காட்டும்படி ரசிகர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அந்த சவாலை ஏற்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி இந்த ஜாலியான போட்டியில் பங்கேற்கலாம். இந்த உடற்பயிற்சி சவால் மூலம் திரட்டப்படும் நிதி டெல்லியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான உதய் பவுண்டேசனிடம் வழங்கப்படும்.
இது குறித்து இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தருணத்தில் நிறைய மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக நாங்கள் தினசரி படித்து வருகிறோம். இந்த ஏழை மக்களுக்கு, அணியாக ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். அதற்காக ஆன்லைன் மூலம் உடல் தகுதி சவால் போட்டி நடத்தி நிதி திரட்டுவது சரியான வழியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த முயற்சியின் மூலம் மக்களையும் தொடர்ந்து சுறுசுறுப்பாக வைத்து கொள்ள முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். குறைந்தபட்சம் 1,000 குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையாவது வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் பலர் பரிதவிக்கிறார்கள். இத்தகைய ஏழைக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக நிதி திரட்ட இந்திய பெண்கள் ஆக்கி அணியினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 18 நாட்கள் உடல் தகுதி பயிற்சி குறித்த வெவ்வேறு விதமான சவால்களை இந்திய ஆக்கி அணி வீராங்கனைகள் ஆன்லைன் மூலம் அறிவித்து அதனை செய்து காட்டும்படி ரசிகர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அந்த சவாலை ஏற்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி இந்த ஜாலியான போட்டியில் பங்கேற்கலாம். இந்த உடற்பயிற்சி சவால் மூலம் திரட்டப்படும் நிதி டெல்லியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான உதய் பவுண்டேசனிடம் வழங்கப்படும்.
இது குறித்து இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தருணத்தில் நிறைய மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக நாங்கள் தினசரி படித்து வருகிறோம். இந்த ஏழை மக்களுக்கு, அணியாக ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். அதற்காக ஆன்லைன் மூலம் உடல் தகுதி சவால் போட்டி நடத்தி நிதி திரட்டுவது சரியான வழியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த முயற்சியின் மூலம் மக்களையும் தொடர்ந்து சுறுசுறுப்பாக வைத்து கொள்ள முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். குறைந்தபட்சம் 1,000 குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையாவது வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.