செய்திகள்
ஸ்மித், குயிண்டன் டி காக்

குயிண்டன் டி காக்கிற்கு கேப்டன் பதவி இல்லை: ஸ்மித் திட்டவட்டம்

Published On 2020-04-17 12:37 GMT   |   Update On 2020-04-17 12:37 GMT
ஒயிட்-பால் கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள குயிண்டன் டி காக், டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டன் இல்லை என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய முடிவு செய்தது.

அதன்படி ஸ்மித் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

டு பிளிஸ்சிஸ் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தற்போது ஸ்மித்தின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் மாதம் வரை அவர் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் தலைவராக இருப்பார்.

இந்நிலையில் குயிண்டன் டி காக் டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்படமாட்டார் என ஸ்மித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘குயிண்டன் டி காக் ஒயிட்-பால் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக செயல்படுவார். ஆனால், ஒர்க்லோடு மற்றும் மன திறன் அம்சத்தில் அவரை துடிப்பாக வைத்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக பணியாற்றுவது மிகவும் சவாலானது, நாங்கள் அவர்மீது சுமையை திணிக்க விரும்பவில்லை என்பதை என்னுடைய தனிப்பட்ட அனுபத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டது.

டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் என்று ஒருவர் பெயரை தற்போது குறிப்பிட முடியாது. நிறைய போர் ஒரு தரநிலையில் உள்ளனர்’’ என்றார்.
Tags:    

Similar News